1. நெஞ்சு சளிக்கு - தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து
நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு - ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு
துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால்
தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்கு - பால் மிளகு, திப்பிலி,
ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு
குணமாகும்.
4. தொடர் விக்கல்க்கு - நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன்
சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. வாய் நாற்றம் - சட்டியில்
படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து
வந்தால் வாய் நாற்றம் போகும்.
6. உதட்டு வெடிப்புக்கு - கரும்பு சக்கையை
எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு
வெடிப்பு குணமாகும்.
7. அஜீரணம் - ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி,
சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம்
சரியாகும்.
8. குடல்புண்க்கு - மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க
வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9.
வாயு தொல்லைக்கு - வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை
நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10. வயிற்று வலிக்கு - வெந்தயத்தை
நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11.
மலச்சிக்கல் - செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர
மலச்சிக்கல் தீரும்.
12. சீதபேதி - மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச்
சாப்பிட சீதபேதி குணமாகும்.
13. பித்த வெடிப்புக்கு - கண்டங்கத்திரி இலைசாறை
ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14.
மூச்சுப்பிடிப்புக்கு - சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு
எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு
உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
15. சரும நோய்க்கு - கமலா
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில்
தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
16. தேமல் - வெள்ளை பூண்டை
வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல்
குணமாகும்.
17. மூலம் - கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம்
பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
18.
தீப்புண் - வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர
தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
19.
மூக்கடைப்புக்கு - ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்
காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு
விரைவில் நீங்கும்.
20. வரட்டு இருமல் - எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து
குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
21. நரம்பு சுண்டி இழுத்தால் - ஊற வைத்து,
முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது
சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம்
தேனுக்கு உடையது.
22. பல்லில் புழுக்கள் - சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து,
நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
23.
உடல் பருமன் குறைய - வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக்
குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக்
கொள்ளலாம்.
24. தேன் உடல் பருமனைக் குறைக்கும். தேனுடன் குளிர்ந்த தண்ணீரை
கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
25. வெண்மையான பற்களைப் பெற - ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும்
முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும்
போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும்
வலுவடையும்.
26. கணைச் சூடு குறைய - சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து
நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும்
ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல்
தேறிவிடும்.
27. வலுவான பற்கள் - வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள்
நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது
சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால்
வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
28. உடல் சூடு - ரோஜா
இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும்
சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம்
சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை
மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல்
பெருக்கும்.
30. கக்குவான் இருமல் - வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து
கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
31. உள்நாக்கு
வளர்ச்சி - உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத்
தடுக்கும்.
32. இரத்தசோகை நோய்க்கு - தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம்
அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால்
உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
33.
உடலில் தேமல் மறைய - தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே
குணமாகும்.
- வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும்
வயிற்றில் குடிக்க வேண்டும்.
- எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து,
சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
- ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில்
போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல்
மறையும்.
- மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால்
தேமல் மறையும்.
- 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில்
பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
குறிப்பு: சோப்பு
போட்டுக் குளிக்கக் கூடாது.
34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும்
துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு
நாட்களில் நோய் நீங்கிவிடும்.
- மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல
காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை
நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.
35. தீக்காயங்கள் பட்டவுடன்
முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி
வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி
நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
முட்டைக்கோஸ் இலைகளை
சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள்,
புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.
தீப்புண்களுக்கு
முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.